Saturday, June 27, 2009
இதயமே..
இதயமே..
நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறாயே..
நீயும்
கர்ம யோகிதான்..!
உனக்கு
தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரை
இயங்குகிறாய்..
இதயமே..!
நீ மட்டும்தான்..
வாலிபம்
குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!
உழைப்பை உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!
நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?
உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?
புரியாத புதிர்...
எது எப்படியோ..
என் இதயம்
துடிப்பது மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!
என்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும் அவளாலே..
அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!
ஓன்று மட்டும்
உறுதி..
என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..
ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!
• K.கிருஷ்ணமூர்த்தி
Monday, June 15, 2009
அடியே பெண்ணே..
அடியே பெண்ணே..
என் ஆவி என்னவோ
உனை எண்ணியே வேகிறது..
என் தேவி என்னிடம்
வர வேண்டியே சாகிறது..
என் பாதி உயிர் இன்று,
நீ வரும் திசையில்
வேர்க்கின்றது...
என் மீதி உயிர் மட்டும்,
உன் ஞாபக தென்றலில்
பூக்கின்றது..
என்று வருவாயோ பெண்ணே... ?
உயிரை என்று
திருப்பித் தருவாயோ கண்ணே..?!
மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!
என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!
பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..
என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!
K.கிருஷ்ணமூர்த்தி
Tuesday, June 9, 2009
வாடிய பயிரை..
அனுபல்லவி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..
பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..
சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..
கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..
பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..
சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..
கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை
- K.கிருஷ்ணமூர்த்தி
பாடல் ஒலி வடிவில்..
Vadiya Payirai.mp3 -
Subscribe to:
Posts (Atom)