பல்லவி
அன்புத் தந்தையே - என்
அன்புத் தந்தையே -என்
உள்ளம் உருகி நான்
நன்றி சொல்லுவேன்..
அன்புத் தந்தையே -என்
அன்புத் தந்தையே -உன்
உள்ளம் மகிழ அந்த
விண்ணை வெல்லுவேன்..
என் வெற்றியின் பாதை எல்லாம்
உன் வியர்வையின் மணித்துளிகள்..
என் வாழ்க்கையின் வாசலெங்கும்
உன் தியாகத்தின் எதிரொலிகள்..
(அன்புத் தந்தையே
சரணம் 1
உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன்
உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன்..
இமைகளும் திறவாமல் பார்வையும் ஒன்றில்லை
உன் வழி செல்லாமல் நேர்வழி ஒன்றில்லை..
உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை..
(அன்புத் தந்தையே
சரணம் 2