Thursday, June 6, 2013

அப்பா..

பல்லவி

 அன்புத் தந்தையே - என்

அன்புத் தந்தையே -என்

உள்ளம் உருகி நான்

நன்றி சொல்லுவேன்..

 

அன்புத் தந்தையே -என்

அன்புத் தந்தையே -உன்

உள்ளம் மகிழ அந்த

விண்ணை வெல்லுவேன்..

 

என் வெற்றியின் பாதை எல்லாம்

உன் வியர்வையின் மணித்துளிகள்..

என் வாழ்க்கையின் வாசலெங்கும்

உன் தியாகத்தின் எதிரொலிகள்..                      

 (அன்புத் தந்தையே

 

சரணம் 1

 உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன்

உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன்..

இமைகளும் திறவாமல் பார்வையும் ஒன்றில்லை

உன் வழி செல்லாமல் நேர்வழி ஒன்றில்லை..

உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை..   

(அன்புத் தந்தையே

 

சரணம் 2

அன்று ஓர்நாள் என்னை பணியச் செய்தாய்

பின்பு ஓர்நாள் என்னை நிமிரச் செய்தாய்...

நீ சொன்ன வார்த்தைகளே வாழ்க்கையின் தத்துவங்கள்..

நீ சொன்ன பாடங்களே இன்னும் என் சுவாசங்கள்..

எனக்கென வாழ்ந்திடும் தெய்வமும் நீதானே..       

                                                       (அன்புத் தந்தையே

 

அப்பாவுக்காக, K.கிருஷ்ணமூர்த்தி

 

தந்தையர் தினத்துக்காக நான் இயற்றிய உள்ளூர் பாடல் இது. ஒலி வடிவில் விரைவில் ஒளியேறும். இன்று என்னோடு இல்லாத என் தந்தைக்கும்.. பிள்ளைகளின் நலனுக்காக தன்னையே அற்பணிக்கும் எத்தனையோ தந்தையர்க்கும் இந்த பாடல் சமர்ப்பணம்!

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs