Tuesday, May 14, 2013

தமிழன் என்று சொல்லடா..!

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா!

ஐயய்யோ..!

தப்பா சொல்லீட்டேன்
மன்னிச்சிருங்கோ..!
இன்னொரு தமிழன் கேட்டா
என்னைக் கல்லால அடிப்பான்!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
தாறுமாறாய் பேசடா...!

கடவுளே வந்து காதினிலே
ஒற்றுமை என்று சொன்னாலும்
ஓரங்கட்டி ஓடடா..

ஒன்று சேர்க்க  ஒருவன்  வந்தால்..
வீரத் தமிழா..
நீயே அவனைப் போடடா!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தவறிழைத்தால் மட்டும்
அவன் பரம்பரையையே தாக்கடா...!

தப்புத் தப்பாய் பேசினாலும்ஓகே’ தான்
தமிழன் ஆங்கிலத்தில் மட்டும் பேசனும்..

தப்பித் தவறி ஒருவன் மட்டும்
நல்ல தமிழ்  பேசினால்..
மறத் தமிழா..
அவனைத் தூக்கில்  ஏற்றிக்  கொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
எதிரியாகப் பாரடா...!

வேற்றினத்தான்  தமிழனை  அடித்தால்
நீயும்  சேர்ந்துக் கொல்லடா..

நீயாரென்று கேள்வி எழுந்தால்..
என்
தன்மானத் தமிழா..
‘I NO TAAMIL
என்று..
தலை  நிமிர்ந்து  சொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தலைவனானால் மட்டும்
தரக்குறைவாய் ஏசடா...!

 

வாழ்க தமிழினம்!
வாழும் தமிழ்!!

----K.
கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs