Showing posts with label தமிழ்ப்பள்ளி. Show all posts
Showing posts with label தமிழ்ப்பள்ளி. Show all posts

Monday, February 9, 2009

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்

தமிழன்னையின்
தவப்புதல்வர்களே..
தமிழர்களே..
மலேசியத் தமிழ்ப்பளிகளின்
இன்றைய நிலை என்ன
தெரியுமா உங்களுக்கு?

இங்கே
பாட்டாளியின் பிள்ளைகள்
தமிழ்ப் பள்ளியில்
பெரிய வாத்தியார் பிள்ளைகள்
'செகோலா கெபங்சா ஆனில்'!

உண்மை கசக்கிறதா?
நாவில் தேன் தடவி
என்ன பயன்?
*
தமிழுக்கென்ன
தனப் பற்றாக்குறையா?
இல்லை
மனப்பற்றாக்குறை..

ஆசிரியர் பற்றாக்குறையா?
அதுவும் இல்லை..
அவர்களில் பலருக்கு
அக்கறையில்லை..

தமிழ்ப் பிள்ளைகள்
என்ன?
'தத்தி'களா?
நான் சொல்கிறேன்..
ஒவ்வொருவரும்..
ஒவ்வொரு வர்த்திகள்..
இன்னும் ஏற்றப் படாத வர்த்திகள்!

பெற்றோர்களுக்கு
பொறுப்பே இல்லையா?
பிழை..
புரியவைக்க ஆளில்லை..
தலைவர்களுக்கோ
அதற்கு நேரமில்லை!!

**
இன்னொரு உண்மை தெரியுமா
உங்களுக்கு..?

தன் அலுவலை விட..
அரசியலில்தானே
அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள்
அதிகமான
தலைமை ஆசிரியர்கள்..!!!

அறிஞர்களே..
தமிழர்களே...
தமிழ்ப் பள்ளிகளை
தலைநிமிர்த்தப் பாடுபடும்
தானைத் தலைவர்களே..!

நான் சொல்வதையும்
கொஞ்சம் கேளுங்கள்...

ஆம்..

சிந்திக்கத் தேவையில்லை..
சிறப்பு வகுப்பும் தேவையில்லை..
மான்யம் தேவை இல்லை..
மாயாஜால வித்தைகளும் தேவையில்லை...

"தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகளை
தமிழ்ப் பள்ளீயில்தான் சேர்க்க வேண்டும்"
என்ற
கட்டாய விதி
ஒன்று போதும்...

தமிழ்ப் பள்ளிகளின் தலை எழுத்து
நிச்சயம் மாறும்!!!

-கிருஷ்ணமூர்த்தி

பி.கு:
'தத் துவ மசி" தலைமை ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்தால் ஒழிய.. அவர்களால் அப்பள்ளிகளை முன்னேற்ற உண்மையாக பாடுபட முடியாது!

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs