Sunday, February 9, 2020

தாயுமானவள்..!

பூஜ்யமாய் இருந்தவனை
புன்னகையால் 
பூரணமாக்கியவள்..

விடலையாய் இருந்தவனை
வர்ணனையால் 
வாலிபனாக்கியவள்..
மூங்கிலாய் இருந்தவனை
சுட்டு 
புல்லாங் குழலாக்கியவள்..

மூர்க்கனாய் இருந்தவனை
தொட்டு 
மனிதனாக்கியவள்..
விதையாய் இருந்தவனை
எருவிட்டு 
விருட்சமாக்கியவள்..

புதிராய் இருந்தவனை
கலையெடுத்து 
புதுமையாக்கியவள்..
மேகமாய் இருந்தவனை
அமுதாய்ப்
பொழிய வைத்தவள்..

ஏகனாய் இருந்தவனை
உணர்த்தி 
அனேகனாக்கியவள்...
வெரும்
வார்த்தைகளாய் இருந்தவனை
கவி 
வித்தகனாக்கியவள்..
கடும்
மௌனியாய் இருந்தவனை
சிரிக்கும் 
குழந்தையாக்கியவள்..
அன்பே,
நீ என் 
தாயுமானவள்..!
-கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி


Thanks for being part of me, understanding me, nurturing me, even arguing with me and fighting with me.. 
most of all, thanks for loving me.

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs