Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, April 22, 2009

யுத்த பிக்குகள்!

ஏ புத்தனே..

உன்
சமாதானக் கொள்கைக்கு
இலங்கையில்
கொள்ளி வைத்துக்
கொண்டிருக்கிறார்களே..!

ஈழமே இன்று
இடுகாடாய்..
எங்கள் இனத்தவர்
அங்கே..
பலிகாடாய்..!

எங்கே உன்
சமாதானம்..?
எங்கே போனது
உன்
சாத்துவீகம்..?

*
பாலஸ்தீனத்தில்
ஐந்து பேர்
இறந்தால்
வையகமே அழுகிறது..

ஈராக்கில்
ஒரே ஒரு
குண்டு விழுந்தால்
அகிலமே அதிர்கிறது..!

இலங்கையில் மட்டும்
தவிப்பது
தமிழன் என்பதால்..
இறப்பது
என் இனம் என்பதால்..
தமிழக அரசு கூட,
மௌனமாய்..
மழுப்புகிறது..!

*
புத்தம் பேசும்
புண்ணிய பூமி
யுத்தக் காடாய்
எறிகிறது..

புத்த பிக்குகள்
யுத்த பிக்குகளாய்
எள்ளி நகைப்பது
சுடுகிறது..!

ஆயிரம் காரணம்
கூறிய போதிலும்
புத்தத்தில் கொலைக்கு
இடமுண்டோ..?

எங்கும்
அப்பாவி மக்களின்
அழுகுரல் ஓலங்கள்..
புத்தத்தில் எங்கேதான்
அன்புண்டோ..!

*

ஏ புத்தனே..

இன்னும்
எத்தனை நாட்கள்
எங்களை
ஏமாற்றப் போகிறாய்..?

உன்,
புத்தம் சரணம் கச்சாமி..!
இன்று
யுத்தம் மரணம் கச்சாமி
ஆனது..

உன்,

தர்மம் சரணம் கச்சாமி..!
இன்று..
இரத்தம் இரணகளம் கச்சாமி
ஆனது..!!

இன்னும்
எத்தனை உயிர்கள்
இறந்திட வேண்டும் ..?

இன்னும்
எத்தனைக் காலம்
அழுகுரல் வேண்டும்..?

இந்த
யுத்த பிக்குகள்
கொலைவெறி தீர..
சொல்வாயா சித்தார்த்தா..?!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி

Monday, February 9, 2009

ஈழ முழக்கம்

ஏ சிங்கள இராணுவமே..
மனிதம் என்பதை மறந்துவிட்டு..
இன்னும் எதைச் சாதிக்கப் போகிறாய்?

ஏ ராட்சச பாக்சேவே..
நேப்பாளத்தில்..
மாவோ கிளர்ச்சியினர்
ஆயுதம் ஏந்தியே
சமரசம் பேசவில்லையா?

இன்னும்
எத்தனை பேர் இறந்தால்
உன் பசி அடங்கும்?
தமிழர்களோடு..
உன்னினமும் தானே அழிகிறது..!

ஒன்று மட்டும் சொல்கிறேன்..

எங்களின் சமாதிகளில் நின்று
சமாதானம் பேசாதே..
எங்கள் பிணம்கூட
இப்போது போருக்கு தயார்..!

எங்கள்
வீடுகளை தகர்க்கும் உங்கள் கைகள்
நாளை
நெருப்பில் கூட வேகாமல் போகட்டும்..

எங்கள்
சகோதரிகளை களங்கப்படுத்தும்
உங்கள் குறிகள்
நாளை
நாய்களுக்கு இரையாகட்டும்..

எங்கள்
குழந்தைகளை கொலை செய்யும் பாதகர்களே..
நாளை உங்கள் நாடே சுடுகாடாகட்டும்..!

மறந்துவிட்டாயா..?

இலங்கேசுவரனே எங்கள் இனம்தான்..
எங்களுக்கும் அங்கே சரித்திரம் உண்டு..
இல்லை இல்லை..
எங்களுக்குத்தான் அங்கே சரித்திரம் உண்டு!

ஏ இராட்சச பாக்சேவே..
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறோம்..

உயிர் மேல் உனக்கு ஆசையிருந்தால்..
கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்..
புத்தனின் மதத்தில் மதிப்பு இருந்தால்..

சாத்தானே..
இப்போதே பின்வாங்கு!

-கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs