அத்வைத தாம்பத்யம்
பக்தி யோகம் 9
தொடர் தவம் செய்த
துறவிகள் இருவர்..
இறைவனை அடைய விரும்பும்
இதயங்கள் இரண்டு..
சமுதாயச் சாக்கடையை
சுத்திகரிக்க நினைக்கும்
சிந்தனையாளர் இருவர்..
அரசியல்வாதிகளால் அவதிப்படும்
சாதாரன தமிழர்கள் இருவர்..
சாவகாசமாக சந்திந்தால்
என்ன பேசுவார்களோ
அதைத்தான்...
எட்டு மணி நேரம் பேசினோம்..!
கடவுள் இருக்கிறாரா?
கடவுள் யார்??
சனாதன தர்மமா? இந்து மதமா?
எம்மதமும் சம்மதமா?
மதம் எனும் மதம் பிடித்த
'மனிதர்களை'
என்ன செய்வது?
ஒரு தனி மனிதனின் கடமைகள் என்ன?
அற்ப அரசியல் இலாபத்துக்காக
சமுதாயத்தின் தன்மானத்தை
கதற கதற கற்பழிக்கும்
'தலை'வர்களை என்ன செய்யலாம்?
அரசியல் கட்சியே இல்லாமல்
சிங்கப்பூர் தமிழர்கள்
சிறப்பாக இருக்கின்றன்ரே?
அதெப்படி??
இப்படி..
இன்னும் என்னென்னவோ
பேசினோம்..
உள்ளத்தில்
காதல் பூத்திருந்தாலும்
உதட்டில் உணர்ச்சிகள்
கொளுந்து விட்டு எரிந்து
கொண்டிருந்தாலும்..
இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்
சூடாகி
சுட்டுக்கொண்டிருந்தாலும்..
எட்டு மணி நேரம்
எதார்த்தமாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்..!
இடையே
திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்..
என் சீதாலட்சுமி..!
ஆம் அவளின்
முழு பெயர் சொல்லி அழைப்பதில்தான்
அலாதிப் பிரியம் எனக்கு!
"விதி என்றால் என்ன?
விதியை மதியால் வெல்ல முடியுமா?"
அவளை உற்று நோக்கினேன்..
"நிறைய பேருகிட்டே கேட்டுவிட்டேன்..
திருப்தியான பதில் கிடைக்கலை.."
காயத்ரீ தந்து
மந்திரங்களை குருக்கிய
விசுவாமித்திரனே..
ஆங்கிலேயனுக்கும்
சன்மதத்தை மொழிபெயர்த்த
விவேகானந்தனே..
மனிதகுல மயக்கத்தை போக்க
மகா மந்திரங்களை தந்த
திருமூலக் கடவுளே..!
இரண்டே அடிகளில்
இயற்கையை விளக்கிய
திருவள்ளுவரே..!
எங்கே போய்விட்டீர்கள் எல்லோரும்..
ஏன் எனக்கு இந்த சோதனை..?!
தேவைதானா எனக்கு இந்த வேதனை..???
ஆயிரம் கேள்விகள் உள்ளுக்குள்
அலையாய் பாய்ந்தாலும்..
அவளின் கேள்விக்கு
அவளுக்கு புரியும் வண்ணம்..
பதில் சொல்ல வேண்டிய
கடமை இருப்பதை உணர்ந்தேன்..
காதலுக்கு உரமிட.. !!!
-K.கிருஷ்ணமூர்த்தி
(அந்த கேள்விக்கு எனது பதில் அடுத்த அத்தியாயத்தில்)
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago