மருத்துவம்
பூஜ்யமாய் நின்று
கோடியில் ஒன்றாகி
ஆயிரத்தில் ஒன்றாகி
நூற்றில் ஒன்றாகி
பத்தில் நான்காகி
நாளை
பத்துக்கு பத்தாகும்
– பிணி
மூலனுக்கு மூவாயிரம்
பீஷ்மரோ சில நூறுகள்
பாட்டனுக்கு நூறு
தாத்தனுக்கு எண்பது
அப்பனுக்கு எழுபது
எனக்கு மிஞ்சினால்
அறுபது
பிள்ளைக்கு நோயோடு
ஐம்பது
பேரனுக்கு நோயில்லாமல்
இருபது கண்டாலே
போதும் – வயது
விஞ்ஞான வளர்ச்சியால்
இயற்கை மரணங்கள்
இறந்துவிட்டன..
மருத்துவமனையில்
மரணங்கள் மட்டும் வாழ்கின்றன..!
ஔவை சொன்ன
ஔடதங்கள்
அற்றுப்
போய்
மரணம் வளர்க்கும்
மருந்துகள்
விற்றுத் தீர்கின்றன..
இங்கு
மரண பயம் ஊட்டி ஊட்டி
மருந்து விற்கும்
கலைக்குப் பெயர்
மருத்துவம்!
பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறது
இன்றைய
நவீன மருத்துவம்!!!
-K. கிருஷ்ணமூர்த்தி