Wednesday, September 16, 2015

மருத்துவம்

பூஜ்யமாய் நின்று
கோடியில் ஒன்றாகி
ஆயிரத்தில் ஒன்றாகி
நூற்றில் ஒன்றாகி
பத்தில் நான்காகி
நாளை
பத்துக்கு பத்தாகும் – பிணி

மூலனுக்கு மூவாயிரம்
பீஷ்மரோ சில நூறுகள்
பாட்டனுக்கு நூறு
தாத்தனுக்கு எண்பது
அப்பனுக்கு எழுபது
எனக்கு மிஞ்சினால் அறுபது
பிள்ளைக்கு நோயோடு ஐம்பது
பேரனுக்கு நோயில்லாமல்
இருபது கண்டாலே போதும் – வயது

விஞ்ஞான வளர்ச்சியால்
இயற்கை மரணங்கள்
இறந்துவிட்டன..
மருத்துவமனையில்
மரணங்கள் மட்டும் வாழ்கின்றன..!

ஔவை சொன்ன
ஔடதங்கள் 
அற்றுப் போய்
மரணம் வளர்க்கும் 
மருந்துகள்
விற்றுத் தீர்கின்றன..

இங்கு
மரண பயம் ஊட்டி ஊட்டி
மருந்து விற்கும்
கலைக்குப் பெயர்
மருத்துவம்!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறது
இன்றைய
நவீன மருத்துவம்!!!

 -K. கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs