மலேசியாவில்
தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள்
தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்..
தமிழ்..
அயல்நாட்டினரெல்லாம்
அழகாய் பேசும்
மொழி…
தமிழன் மட்டும்
தவ’ரா’ய்
பேசும் மொழி..!
தமிழ்..
உயிரின் மொழி
உளவியல் மொழி..
அறிவின் மொழி
அறிவியல்
மொழி..
உடம்பின்
அறிவியல்
மட்டுமல்ல..
உயிரின்
அறிவியலையும்
சொல்லும்
ஒரே மொழி!
தமிழ்..
அன்பின் மொழி
பண்பின் மொழி..
அகத்தின்
மொழி
ஜகத்தின்
மூத்த மொழி!
தாய்ப்பாலோடு
தமிழ்ப்பால்
உண்ட குழந்தைகள்
தாயைப் பழிப்பரோ
என்னாளும்..?!
தமிழ்..
நாகரீகம்
வளர்த்த மொழி
நான்திசையும்
வென்ற மொழி..
பல
ராஜ்ஜியங்களை
வென்ற இராஜராஜ
சோழன்
ரௌத்திரம்
கற்றதும்
தமிழில்தான்..!!!
தமிழ்..
ஞான மொழி
ஞால மொழி..
வாழ்க்கை
மொழி..
நாம் வாழும்
வழி..!
வாழும் கலையும்
வாழ வைக்கும்
கலையும்
எண்ணற்ற இலக்கியங்கள்
கண்டதும்
தமிழில்தான்..!!!
***
ஹார்ட்வர்டில்
இருக்கை கிடைத்தது..
தமிழன் மனமோ
இரு கை விரிக்கிறது..!
***
தமிழ்
சோறு போடுமா?
கேடு கெட்ட
தமிழன் மட்டுமே
கேட்கும்
கேள்வி..!
தமிழ் கற்றவன்
எல்லாம் என்ன..
பட்டினி
பிணமானானா?
இருநூறு வருட
வரலாறு
மலேசிய
பள்ளிகளில்
தமிழ்..
இன்று
இருநூறு பள்ளிகளுக்கு
மேல்
மாணவர்
பற்றாக்குறையில்
தமிழ்பள்ளி!
தோழா..
உணர்ந்துகொள்..!
திருப்புகழ்
பாடினால்
ஆயுள் நீளும்..
திருக்குறள்
சொன்னால்
வாழ்வு செழிக்கும்..
சிவஞான போதம்
புரிந்தால்
மெய்ஞானம்
விரியும்
திருமந்திரம்
ஓதினால்
விஞ்ஞானம் விளங்கும்..!
திருமந்திரம் ஓதினால்
விஞ்ஞானமே வணங்கும்..!
தோழா..
புரிந்துகொள்..
உணர்ந்துகொள்..
துணிந்து
நில்..!
உலகமே போற்றும்
தமிழ்தான்..
மொழிகளில்
சிறந்தது!
தமிழனாய்
பிறக்கும்
பிள்ளைகளுக்கெல்லாம்
தமிழ்வழிக்
கல்வியே
மிகச் சிறந்தது!
உன் பிள்ளையின்
தமிழ் எழுத்து
செம்மையானால்..
சமுதாயத்தின்
தலையெழுத்தும்
செம்மையாகும்..!!
--- கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி
3 comments:
அருமை சகோதரரே
'நாகரிகமாக' என்பதே சரி. அடிச்சொல் ' நாகரிகம்.' நல்ல தமிழில் எழதுக!
அந்தப் பெற்றோர்கள். இலக்கண வழுவினைக் களைக!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.