Wednesday, October 14, 2009

தித்திக்கும் தீபாவளி

அண்மையில் நடந்து முடிந்த தீபாராகா பாடல் இயற்றும் போட்டியில், எங்களின் பாடல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று, CELCOM-இன் குறுஞ்செய்தி போட்டியில் மலேசிய மக்களால் சிறந்த பாடலாக தேர்வு பெற்றது. இந்த பாடல், தீபாவளி அன்று அனைத்து celcom கைத்தொலைபேசிகளின் call me ringtone ஆக உலகம் எங்கிலும் இருக்கும். Celcom நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பாடலாகவும் அமைகிறது. இந்த வேளையில், என் பாடலுக்கு குறுஞ்செய்தி வழி வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

பாடலின் வரிகள்:

தித்திக்கும் தீபாவளி

பல்லவி

தீபாவளி.. தீபாவளி..
ஊரெங்கும் கொண்டாடும் தீபாவளி...!
தீபாவளி.. தீபாவளி..
உலகெங்கும் தித்திக்கும் தீபாவளி..!
ஐப்பசி மாசம்.. வரும் சந்தோஷம்..
ஆனந்த தீபம்.. தரும் உல்லாசம்..
வீட்டில் தீபங்கள் ஏற்றுங்களே..
இருளே இல்லாமல் மாற்றுங்களே..
மனதில் வெளிச்சத்தை காட்டுங்களே..
தீய எண்ணத்தை ஓட்டுங்களே..


சரணம் 1

காலை.. கண் விழிப்போமே..
நல்லெண்ணை தலையெல்லாம் தேய்த்திடுவோமே..
நாளும்.. நன்மை செய்வோமே..
நல்லெண்ணம் நெஞ்செல்லாம் சேர்த்திடுவோமே..

ஊரோடு ஒன்றாகவே.. எண்ணங்கள் நன்றாகவே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)

சரணம் 2
வா வா.. தீபங்களோடு..
வானத்தில் மத்தாப்பின் வேடிக்கையோடு..
வா.. வா.. கீதங்களோடு..
மனிதத்தை கொண்டாடும் ராகங்களோடு..!

சோகங்கள் போகட்டுமே.. சொந்தங்கள் வாழட்டுமே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)


K.கிருஷ்ணமூர்த்தி

பி.குறிப்பு: 16/10/09 அன்று இரவு மணி 9-க்கு வானவில்லில் இடம்பெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இப்பாடலும், எங்களின் நேர்காணலும் இடம்பெறும். பாடலை கேட்க விரும்புபவர்கள் www.deeparaaga.com அகப்பக்கத்தில் தித்திக்கும் தீபாவளி என்ற பாடலை தேர்வு செய்து கேட்கலாம். இறுதிச் சுற்றுப் போட்டிக்கு வந்த அனைத்து பாடல்களுமே மிகத் தரமான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

5 comments:

sivanes said...

மிக மிக சந்தோக்ஷமான செய்தி நண்பரே, தங்களின் வெற்றிக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள், மேலும் சீரிய படைப்புக்கள் பல ஈன்று வெற்றி விருதுகள் பல பெற்று மகிழ மனமார்ந்த‌ நல்வாழ்த்துக்கள், பாடல் வரிகள் சிற‌ப்பாக அமை‌ந்துள்ளன‌, வானவில்லில் தங்களின் நேர்காணலை காண ஆவலோடு காத்திருக்கின்றோம்..!

Sathis Kumar said...

இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தங்களின் பாடல் தேர்வு செய்யப்பட்டமைக்கு எனது வாழ்த்துகள் நண்பரே.. தொடர்ந்து இசைத்துறையில் பல வெற்றிக் கனிகளை நீங்கள் ஈட்ட வேண்டும் என்பதே எங்களது அவா..

அன்புடன், கி.சதீசு குமார்

கிருஷ்ணா said...

நன்றி தோழி சிவனேசு.. நன்றி நண்பா.. (ஒற்றன்) உங்களைப்போல் நல் உள்ளங்களின் வாழ்த்து ஒன்றே எனைப் போன்ற கலைஞர்களுக்கு ஊக்க மருந்து!~

Tamilvanan said...

வாழ்த்துகள் நண்பரே

கிருஷ்ணா said...

நன்றி தமிழ்வாணரே!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs