பக்தி யோகம் 7
நூலக நிசப்தத்தின் நடுவே..
எழுதிக் கொடுத்த
'வாழ்க்கை'யை
எழுத்துக் கூட்டிப்
படித்துக்கொண்டிருந்தாள்..
பல்கலைக்கழகத்தில்
எத்தனையோ
ஆங்கிலப் புத்தகங்களில்
ஆங்கில வார்த்தைகளை
தமிழ்ப் படுத்தி படித்திருக்கிறேன்..
அன்றுதான்..
தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலப் படுத்தி
படிக்கவும் ஆளிருக்கிறதென்று
பெருமிதம் அடைந்தேன்..!
அதற்கு மேலும்
எட்டி நின்று பார்க்காமல்
அருகில் சென்றேன்..
நாணம்..
அந்த ஒரு சொல்லின்
சுயரூபம்
அன்றுதான் முழுதாய்
விளங்கியது!
புன்னகை பூக்கும்
அவள்
அழகு அதரங்கள்
தொட்டாற் சிணுங்கி போல
சுருங்கிக் கொண்டன..
தமிழ் தெரியாமல்
தவித்த கவிதைக்கு
என் கவிதையை
நானே மொழி பெயர்த்தேன்..
நின்று கொண்டே..
கவிதை பேசியது..
"உட்காருங்களேன்.."
"நான் உட்கார்ந்தா
ரெண்டு மணி நேரம்
என்கூட பேசனும்..
முடியுமா..??"
சரி என்று புன்னகை
பதிலளித்தாள்..
அன்று
எங்கள் அளவளாவல்
எட்டு மணி நேரம்
நீடித்தது..!!!
-அளவல் தொடரும்..
K.கிருஷ்ணமூர்த்தி
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago