Wednesday, December 22, 2010

சொல்லடி சிநேகிதி..


சொல்லடி சிநேகிதி..

உன் உதடுகள்
என்ன..
சிக்கி முக்கி கற்களா?
ஒன்றை ஒன்று உரசுகையில்
உள்ளுக்குள் தீப்பிடிக்கின்றதே!

நீ..
மெதுவாய் புன்னகை செய்தாலும்
என் இருதயம் என்னவோ
எட்டு மடங்காய் துடிக்கிறது..

என்
வியாதியும் நீ
மருந்தும் நீ..

உன்
உதட்டு முத்தமும்..
உணர்வின் மொத்தமும்..
சிரிப்பின் சத்தமும்..
சில்மிஷம் தரும் பித்தமும் தானடி
என் மருந்துச் சீட்டு!
அதை
உன் நிலைக்கண்ணாடியில்
எழுதி மாட்டு!!!

மெல்லிசைப் பூவே..

உன் இமைகள் அசைந்தால்
என்னுள் வயலின்
மோகனம் இசைக்கிறது...

உன் இதழ்கள் நெளிந்தால்
என்னுள் புல்லாங்குழல்
டிஜிட்டலில் கேட்கிறது..

உன் சிணுங்கள் மட்டும்
என்ன ராகம்..?
புரியவே இல்லை!

சிரிப்பழகி என்று சொன்னேன்...
சிரித்துக் கொண்டே இருக்கிறாள்..!
சரி சரி..
சிரிக்காவிட்டாலும் நீ
அழகுதான்..
சிரிப்பு நிற்பதாயில்லை!!!

தூரிகைப் பெண்ணே..

உன் விரல்களின் தீண்டல்..
என்னுள்
விழுதுகளாக..

உன் இதழ்களை தின்னும்
எண்ணம்
விரதங்களாக..

என் தமிழ்ப் பசிக்கு
தீனியே நீதானடி!

சொல்லடி சிநேகிதி..

என்னள் இருக்கும்
எண்ணங்கள்
எழுத்துக்களாக..

உன்னள் இருக்கும்
உண்மைகள்..
என்றும் ஊமையாக..!

சொல்லடி சிநேகிதி..

புன்னகை மட்டுமே பதில் என்றால்
சங்கத் தமிழ் ஏதுக்கடீ?!

-கிருஷ்ணமுர்த்தி




4 comments:

Vijay Periasamy said...

நல்ல ரசனையான கவிதை ... மிகவும் அருமை.. வாழ்த்துகள்...

கிருஷ்ணா said...

இரசித்தமைக்கு நன்றி விஜய்!

பனித்துளி சங்கர் said...

நவீனத்துவதிற்கு தகுந்தக் காதல் வார்த்தைகள் . கவிதை சிறப்பு . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்

கிருஷ்ணா said...

கருத்துக்கும் பின்னூட்டுக்கும் நன்றி...!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs