
உதடுகளின் ஊடே
உயிரை உறிஞ்சிய
அந்த சில
உன்னத நிமிடங்கள்...
என்,
விரகக் கரங்களில்
கனிந்த மார்போடு
நீ..
அயர்ந்திருந்த
அந்த ஒரு சில
நிஜத்தின் நிமிடங்கள்...!
என் காதருகே..
உன் ஏகாந்த
மென் குரலால்
கவி பாடிய..
அந்த ஒரு சில
நொடிப் பொழுதின்
நகல்கள்..
இன்னமும்
என்
இதய கேமராவில்...!
நீ ஒரு புதுக்கவிதை..
மரபிலிருந்து
சற்றே மாறுபட்டதால்..!
உன்
நிரந்தர இரசிகன் நான்..!
வெறுத்து விடாதே
கண்மணி
என் விரல்களை
மட்டும்..
துடிப்பான
விரல்கள் அவை..
எல்லைகளை
எல்லை மீறி தாண்டினாலும்..
உணர்ச்சிகளை
உன் ஒத்துழைப்போடு தூண்டினாலும்..
ஒரு போதும்
வெறுத்து விடாதே என்
விரல்களை மட்டும்...!
உணர்ச்சிகளை தூண்டவும்
அதே விரல்கள்தான்
உணர்வற்ற
உடலை எரிக்கவும்
அதே விரல்கள் தான்..!
கத்திருக்கிறேன் கண்மணி..
உன் ஏகாந்த இளமையை..
என்னுள் இணைத்துவிட
துடிக்கிறேன் கண்மணி..!
உன்
இளமையின் கதகதப்பில்..
இதயத்தின் படபடப்பில்..
உணர்ச்சிகளின் படையெடுப்பில்..
உள்ளத் தவிப்புகளின் விடையளிப்பில்..
உறவாடும் அந்த
உன்னத நாளை எதிர்பார்த்து..
காத்திருப்பேன் கண்மணி..!
அவசரமில்லை..
அமைதியுமில்லை..!
அந்த இன்பத்தில்
நீ முகிழ்ப்பதை..
துடிப்பதை..
உணர்வுகளின் உச்சத்தில்
நீ வெடிப்பதை..
ஒரு கணம்..
பார்த்து இரசிக்க வேண்டும்..
காத்திருப்பேன் கண்மணி..!
இது அவசரமில்லை..
இளமையின் தொல்லை..!
என்ன செய்வது..
இனிமேல்
ஆவலைச் சொல்ல
வார்த்தையும் இல்லை...!!!
- K .கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.