Friday, April 10, 2009

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து

  • பண்பெனும் பாலூட்டினார் அன்னை..

ஊரில் உன்னை அனைவரும் மதிக்க

  • அறிவெனும் சோறூட்டினார் தந்தை..

நாரில் பூவாய் என்றும்நீ மணக்க

  • நாதாக்கள் ஆற்றிய நற்பணியை

நேரில் காணும் நெஞ்சம் துடிக்க

  • நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..!


பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு

  • பனிசெய்து கிடந்திடு என்றும்நீ

பொதிஇவன் என்றுஉன் தந்தையை

  • பழித்து விடாதே ஒருபோதும்

கொதித்து எழுவாள் உனதன்னை- உருக்

  • குலைந்து விடுவாய் உடனேநீ..!

சிரித்து அவர்களை உபசரித்தால்

  • செழித்திடும் உனது எதிர்காலம்..


கண்ணீர்க் கடலை கடந்தவர்கள்

  • கவலையறி யாதுனை வளர்த்தவர்கள்..

தண்ணிர் அற்ற நடுக் காட்டினிலே

  • தவிக்க விடாதே அவர்களைநீ..

முன்னூறு நாளுனை சுமந்ததற்கு

  • மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு

முன்னேறும் வேளையில் பெற்றோரை

  • மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

2 comments:

sakthi said...

முன்னூறு நாளுனை சுமந்ததற்கு

* மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு

முன்னேறும் வேளையில் பெற்றோரை

* மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!

really nice

கிருஷ்ணா said...

நன்றி..! மீண்டும் வருக..

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs