Sunday, April 12, 2009

தமிழழகி..!


நிலவு தோற்றதடி பெண்ணே..
கறையிலாமல் கவர்ந்திழுக்கும் -உன்
கறுப்பு கன்னங்களுக்கு முன்னே
நிலவு தோற்றதடி பெண்ணே..!

மலரும் தோற்றதடி பெண்ணே..
இளமையை சோதிக்கும் -உன்
ஈர இதழ்களுக்கு முன்னே..
மலரும் தோற்றதடி பெண்ணே..

மின்னல் தோற்றதடி பெண்ணே..
மின்சாரம் இல்லாமலே தாக்கும் -உன்
மகரந்தப் பார்வைக்கு முன்னே..
மின்னல் தோற்றதடி பெண்ணே..!

வீணை தோற்றதடி பெண்ணே..
மீட்டாமலே மயக்கும் -உன்
ஏகாந்த குரலுக்கு முன்னே..
வீணை தோற்றதடி பெண்ணே..!!

மல்லிகை தோற்றதடி பெண்ணே..
மெய்சிலிர்க்க புன்னகைக்கும் -உன்
முத்தான பற்களுக்கு முன்னே..
மல்லிகை தோற்றதடி பெண்ணே..!!!

தூரிகை தோற்றதடி பெண்ணே..
தொடாமலே தீண்டிச் செல்லும் -உன்
தூண்டில் கண்களுக்கு முன்னே..
தூரிகை தோற்றதடி பெண்ணே..

சித்திரம் தோற்றதடி பெண்ணே..
சிந்தையினை சொக்கவைக்கும் -உன்
சிங்கார வளைவுகளின் முன்னே
சித்திரம் தோற்றதடி பெண்ணே..!!!

தங்கம் தோற்றதடி பெண்ணே..
உரசாமலே உருகவைக்கும் -உன்
அந்தரங்க அங்கத்தின் முன்னே..
தங்கம் தோற்றதடி பெண்ணே..

வெண்மை தோற்றதடி பெண்ணே..
கோயில் சிலைபோல் கிறங்கவைக்கும் -உன்
கோகில மேனிக்கு முன்னே..
வெண்மை தோற்றதடி பெண்ணே..!!!

K.கிருஷ்ணமூர்த்தி

8 comments:

நட்புடன் ஜமால் said...

மொத்தத்தில் அழகு பெண்

கண் முன்னே ...

கிருஷ்ணா said...

நன்றி ஜமால்..

Anonymous said...

நிலவு மலர் மின்னல் வீணை மல்லிகை தூரிகை தங்கம் வெண்மை சித்திரம் என தோற்றவை இவை மட்டுமல்ல கவி பாடிய நீரும் அன்றோ....மதி தோற்று அவள் மனம் வென்றிரோ....

கிருஷ்ணா said...

தமிழரசி.. வருக வருக..! இது, ஒரு தோழருக்காக, அவர் நடத்தவிருக்கும் ஒரு ஆடையலங்கார நிகழ்ச்சிக்காக நான் எழுதிய கவிதை.. அதில் கலந்துகொள்ளவிருக்கும் மாடல் அழகிகள் எல்லாம், நம்மின, கலர் கம்மியான சகோதரிகளாம். அவர்களின் அழகை புகழ் பாடுவதாக ஒரு கவிதை கேட்டார். அதற்காக வடிக்கப் பட்ட கவிதை..

பெண்மையிடம் ஆண் தோற்பினும், ஆண்மையிடம் பெண் தோற்பினும், வெற்றி என்னவோ இருவருக்குமே!

sakthi said...

நிலவு தோற்றதடி பெண்ணே..
கறையிலாமல் கவர்ந்திழுக்கும் -உன்
கறுப்பு கன்னங்களுக்கு முன்னே
நிலவு தோற்றதடி பெண்ணே..!

arumai ella varigalume

கிருஷ்ணா said...

நன்றி சக்தி!

VIKNESHWARAN ADAKKALAM said...

அழகான கவிதை :)

கிருஷ்ணா said...

நன்றி விக்கி..!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs