Saturday, August 14, 2010

அத்வைத தாம்பத்யம் (8)

பக்தி யோகம் 8

எட்டு மணி நேரம்
என்ன பேசினோம்?

காதல் பற்றிய
கலந்துரையாடலா?

புதிய படம் பற்றிய
புலம்பலா?

நண்பர்கள் பற்றிய
நையாண்டியா?

இல்லை
கல்வியின் மேல் கொண்ட
கரிசனமா?

அவளின் அழகை மெச்சும்
அபிஷேகமா?
அவளின் குரலை மெச்சும்
கொஞ்சலா?

அவளின் உடையை மெச்சும்
உளரலா?

இல்லை
உணர்ச்சிகளின் கொச்சை
கிளர்ச்சியா?

எதுவுமே இல்லை..!

எட்டு மணி நேரம்
அப்படி
என்னதான் பேசினோம்?

           - பதில், அடுத்த இடுகையில்
              K.கிருஷ்ணமூர்த்தி

2 comments:

Unknown said...

என்ன பேசினோம் எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பது தானே காதல்!! கவிதை அருமை!!

கிருஷ்ணா said...

ஹஹ.. உண்மைதான் தோழரே.. பின்னூட்டுக்கு நன்றி!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs