Friday, March 27, 2009
இறைவன்
அருளும் போது இரண்டானான்.. X 2
மூன்று காலமும் வாழ்கின்றான்.. அவன்
மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்..
இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்..
நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
படைத்தல் காத்தல்
அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியும் அவனிடம் கிடைக்கும்.. X 2
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
பாடலாக்கம்:
K.கிருஷ்ணமூர்த்தி
(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)
பாடல் ஒலி வடிவில்..
Iraivan.mp3 -
தேவை இல்லை!
கூடில்லை..
வாடகை
தரவும் காசில்லை..
சோறில்லை
நீறில்லை
சோதனைக்கு
ஓர் எல்லையில்லை..
ஊனில்லை
உறக்கமில்லை
என் உயிரே
எனக்கு சொந்தமில்லை...!
ஏடில்லை
எழுத்தில்லை..
ஏட்டுக்கல்வியும்
எனக்கில்லை..
மானமில்லை
ஈனமில்லை
மேனியிலே
நல்ல துணியுமில்லை..
கூனுமில்லை
குருடுமில்லை
ஆனாலும்
குடித்தனம்
எனக்கு தேவையில்லை..!
வேலையில்லை
வெட்டியில்லை
வேதனையை
சொல்லி அழ யாருமில்லை..
அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..
கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!
K.கிருஷ்ணமூர்த்தி
Tuesday, March 24, 2009
தலையணை மந்திரம்

- பாவை நான் இங்கிருக்க..
தொட்டில் உறங்க வைச்சு
- துணை சேர காத்திருக்க..
கட்டில் கதை படிக்க
- கண் முழிச்சி வேர்த்திருக்க..
தட்டில் பால் பழமும்
- மாமனுக்கு காத்திருக்க..
"யாரோ தானே மாமியார்
- எனக்கு என்ன தேவையா..?
மோரோ கூழோ கொடுப்பாங்க
- மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
- ஒன்னும் கெட்டுப் போகாது..
- கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"
தலையணை மந்திரம் நான் போட
- தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
- சிந்தனை எல்லாம் இழந்தாக..
- சாயங்காலம் போனாக..
- விம்மிக் கொண்டே போனாங்க..!
ஆவி கொதிப்பதை நான்
- ஆருகிட்ட சொல்லி அழ..?
பாவி மனுசன் அவன்
- இன்னும் வந்து சேரலையே!
கூவி விடிய வைக்க
- கோழியுந்தான் வந்திருச்சே..
- தேவருந்தான் போனதெங்கே..??!!
-K. கிருஷ்ணமூர்த்தி
(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)
Saturday, March 21, 2009
அண்ணன் வேதமூர்த்தி

எங்களின் வலியை சுமந்து..
நீ புலி..
தலைவர்களுக்கும்
அதுவே இப்போது
***
Tuesday, March 17, 2009
அவமானம்

Saturday, March 14, 2009
சீதை..

தீக்குளிக்கிறாள்..
பேதை
அவளுக்கு
வேறென்ன தெரியும்..?
ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..
அவளின்
வழக்குமன்றத்தில்..
நீதி தேவதையின்
செவிகள்..
செதுக்கப்பட்டு விட்டன..!
இங்கே..
நீதிபதிதான்
வாதி..
மனம் கல்லாய்ப்போன
சுயநலவாதி..!
சாட்சிக் கூடத்திலோ..
ஊமை இராமன்..!
பேதை அவள்
வேறென்ன செய்வாள்..??
ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..!
- K.கிருஷ்ணமூர்த்தி
Friday, March 13, 2009
சிறைப்பறவை

Thursday, March 12, 2009
அடுத்த நூற்றாண்டு
- தாவரங்களுக்கும் தனி வீடு இருக்கும்..
சுறுசுறுப்பு இரயிலில் வாழ்நாள் விரையும்,
- சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்..
கறும்புகை முகிலில் அமிலங்கள் பொழியும்,
- கரியமிலவாயுவில் பிராணமே கரையும்..
திருமணச் சேர்க்கை தெருவினில் நிகழும்,
- தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்.. !!
அன்று.. தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்..!!!
-K. கிருஷ்ணமூர்த்தி
Wednesday, March 11, 2009
கவிதை
என்றும்
உனது இராஜாங்கம்..
நிதம்நிதம் இதம்தரும்
இரவில்
உனது வேதாந்தம்..
நினைத்தது அணைக்கவே
மனதில்
கோடி ஆதங்கம்..
உன்..
மடிதனில் தவழ்வதே
எனது
வாழ்வின் பேரின்பம்..!
என் மூச்சிலே
என் பேச்சிலே
உன் வாசம் வீசும்..
வானம் எங்கும்
தேவர் கூட்டம்
வந்து வாழ்த்தட்டும்..
வாழ்நாளெல்லாம்
உன் ஞாபகம்
தீராத மோகம்...
நீயும் நானும்
சேரும் நேரம்
பூமி பூப்பூக்கும்...
நிஜமே வா..
நினைவே வா..
என்
உயிரின் உருவே வா..
நெஞ்சில் என்றும்
நீயிருந்து..
நீண்ட அமைதி தா..
சுகமே வா..
சுவையே வா..
என்
சோகத் தீர்வே வா...
சாகும் போதும்
நீயிருந்து..
சந்த கீதம் தா..!
-K.கிருஷ்ணமூர்த்தி
Friday, March 6, 2009
குறைகள்..

இல்லாமல் இருக்க
நாம்..
இறையும் அல்ல..
அதைச்
சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!
குறைகளை களையவே
மனிதப் பிறப்பு..
குறைகளை
களைந்துவிட்டால்
இனி ஏது பிறப்பு..??
இங்கே..
யாருக்கு இல்லை
குறை..?
குறையுள்ளவந்தானே
நிறையைத் தேடி
அலைகிறான்..
பையின் கணம்
குறையும்போது
பணத்தைத் தேடி
அலைகிறான்..
அனைக்கும்
அன்பு
குறையும்போது
காதலைத் தேடி
அலைகிறான்..
உடலில்,
வாலிபம்
குறையும்போது
வாழ்க்கையைத் தேடி
அலைகிறான்..
வாழ்க்கையின்
வாலிபம்
குறையும்போது
கடவுளைத் தேடி
அலைகிறான்...!!!
நண்பா..
குறைகளைக் கண்டு
குரைப்பதும்..
நிறைகளைக் கண்டு
நகைப்பதும்..
இயந்திர மனிதனின்
இயற்கை..
அதைச்
சிலர் செய்யாதிருப்பதுதான்..
செயற்கை..!!
குறைகளின்
குணங்களை
குறிப்பறிவதை விட்டுவிட்டு..
குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!
K. கிருஷ்ணமூர்த்தி
Wednesday, March 4, 2009
வேறென்ன வேண்டும்..?!

- நட்சத்திரங்கள் கண்ணாக வேண்டும்..
இளவே னில்நீ நடந்துவர வேண்டும்..
- இளமை சுகங்கள் கடந்துவர வேண்டும்..
மலரே!என நான்வியக்க வேண்டும்..
- மனதில் வந்து மயக்க வேண்டும்..
நிலமே உன்னை ரசிக்க வேண்டும்..
- நீஎன்னில் மட்டும் வசிக்க வேண்டும்..
கைவளை சத்தம் கேட்டிட வேண்டும்..
- கனிந்த முகத்தில் விழித்திட வேண்டும்..
சைகையில் என்னை அழைத்திட வேண்டும்..
- சிறுவன் என்னை குளிப்பிக்க வேண்டும்..
கைவிரல் கொண்டு துவட்டிட வேண்டும்..
- காதில் காதல்கதை சொல்ல வேண்டும்..
மைவிழி மெல்ல மலர்ந்திட வேண்டும்..
- மௌனம் கலைந்து சிரித்திட வேண்டும்..
தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்..
- தாமரை இதழ் சுவைத்திட வேண்டும்..
சிலைமேனி என் விரல்தீண்ட வேண்டும்..
- சீலை களைய சினுங்கிட வேண்டும்..
- காமன் கலைகள் பயின்றிட வேண்டும்..
- காலைப் பொழுதில் உறங்கிட வேண்டும்..
-K.கிருஷ்ணமூர்த்தி
Monday, March 2, 2009
தாஜ்மஹால்
