Wednesday, March 11, 2009

கவிதை

வசந்தமோ சுகந்தமோ..
என்றும்
உனது இராஜாங்கம்..

நிதம்நிதம் இதம்தரும்
இரவில்
உனது வேதாந்தம்..

நினைத்தது அணைக்கவே
மனதில்
கோடி ஆதங்கம்..

உன்..
மடிதனில் தவழ்வதே
எனது
வாழ்வின் பேரின்பம்..!

என் மூச்சிலே
என் பேச்சிலே
உன் வாசம் வீசும்..

வானம் எங்கும்
தேவர் கூட்டம்
வந்து வாழ்த்தட்டும்..

வாழ்நாளெல்லாம்
உன் ஞாபகம்
தீராத மோகம்...

நீயும் நானும்
சேரும் நேரம்
பூமி பூப்பூக்கும்...

நிஜமே வா..
நினைவே வா..
என்
உயிரின் உருவே வா..
நெஞ்சில் என்றும்
நீயிருந்து..
நீண்ட அமைதி தா..

சுகமே வா..
சுவையே வா..
என்
சோகத் தீர்வே வா...
சாகும் போதும்
நீயிருந்து..
சந்த கீதம் தா..!

-K.கிருஷ்ணமூர்த்தி

5 comments:

Anonymous said...

தமிழ் இசைப் பாடல் வரிகள் போல உள்ளது நண்பரே! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

கிருஷ்ணா said...

நன்றி நண்பரே.. எழுதிக்கொண்டே இருக்கிறேன்.. மை தீர்ந்தாலும் கவலையில்லை.. காரணம்.. இங்கே எழுத மை தேவையையில்லை! பொறு'மை' போதுமானது.. ஹஹ

VIKNESHWARAN ADAKKALAM said...

அசாத்தலாக இருக்கின்றன வரிகள்... மேலும் அசத்துங்கள்...

கிருஷ்ணா said...

நன்றி விக்கி.. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான்.. என் எழுதுகோலின் ஆக்கம்

குமரன் மாரிமுத்து said...

சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் நோட்டமிட வந்திருக்கிறேன்.

ஆனால்...

வாட்டம் இல்லாமல் விடைபெறுகிறேன்.

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs