Tuesday, March 24, 2009

தலையணை மந்திரம்


பட்டில் புடவை கட்டி
  • பாவை நான் இங்கிருக்க..

தொட்டில் உறங்க வைச்சு

  • துணை சேர காத்திருக்க..

கட்டில் கதை படிக்க

  • கண் முழிச்சி வேர்த்திருக்க..

தட்டில் பால் பழமும்

  • மாமனுக்கு காத்திருக்க..


"யாரோ தானே மாமியார்

  • எனக்கு என்ன தேவையா..?

மோரோ கூழோ கொடுப்பாங்க

  • மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
ஊரோ உலகோ பழிச்சாலும்..
  • ஒன்னும் கெட்டுப் போகாது..
காரோ வீடோ வாங்கிப்புட்டா..
  • கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"


தலையணை மந்திரம் நான் போட

  • தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
சிலையென என்னைக் கண்டவுடன்
  • சிந்தனை எல்லாம் இழந்தாக..
சரியென அண்ணன் வீட்டுக்கு
  • சாயங்காலம் போனாக..
விதியென எண்ணி அத்தையுந்தான்,
  • விம்மிக் கொண்டே போனாங்க..!


ஆவி கொதிப்பதை நான்

  • ஆருகிட்ட சொல்லி அழ..?

பாவி மனுசன் அவன்

  • இன்னும் வந்து சேரலையே!

கூவி விடிய வைக்க

  • கோழியுந்தான் வந்திருச்சே..
தேவி எனை மறந்து,
  • தேவருந்தான் போனதெங்கே..??!!

-K. கிருஷ்ணமூர்த்தி

(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

அசத்தலான கவிதை. இரசித்தேன்... :)

நட்புடன் ஜமால் said...

நன்றாகவே இரசித்-தேன்

கிருஷ்ணா said...

நன்றி விக்கி.. ஜமால். படிப்பதோடு நில்லாமல் அடிக்கடி பின்னூட்டம் தருவதால் என் எண்ணங்களுக்கு எருவூட்டுகின்றீர்கள்! நன்றீ!

Bala said...

nalla karpanai kavithai...

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs