Sunday, February 1, 2009

ஆண்டவன்

இறந்த கால அரசனை
‘ஆண்டவனாக’
ஆராதிக்கிறார்கள் ஆத்திகர்கள்..

நிகழ்கால
நிஜங்களுக்காக
நியாயம் கேட்கும..
நான் மட்டும் நாத்திகனாம்..!

அந்த..
இறந்தகால
‘ஆண்டவன்’ அடியில்
அர்ச்சனைப் பூக்களாவதை விட..

நிகழ்கால நதிக்கரையில்
நாணலாவதையே
விரும்புகிறேன் நான்..!

-கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs