Sunday, February 1, 2009

ரோஜா

ரோஜாவே..
உன் கவர்ச்சியை
காவல் காத்திட
முட்கள் எனும் ஆயுதத்தால்
வேலி போட்ட இறைவன்..

உன்
வாசத்தை மட்டும்
பூட்டி வைக்க மறந்து விட்டானே?!

உன் சின்ன இதழ்களுக்கு
சிகப்புச்சாயம் பூசியது யார்?!

உங்கள் இதழ்கள் மட்டுமே
அதிகார ஆண்களை எதிர்த்து
எதுவுமே பேசுவதில்லை..!

ஓ..
அதனால்தான்..
காதல் பரிசாய்
உங்களைத் தருகிறார்களோ?!

வாடிவிட்டாலும்
வீடுகளை அலாங்கரிக்கும்
ஒரே பூவினம் நீதானடி!

முட்களின் மத்தியில் இருந்தாலும்..
சிரித்துக்கொண்டே இருக்கிறாயே..?

அந்த வித்தையை உங்களிடம்
நாங்கள்
கட்டாயம் கற்க வேண்டும்..!

-கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs