Sunday, February 1, 2009

சிகரெட்.. !!


ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ..!

உனக்கு
கொள்ளி இட்டவர்களை
சித்ரவதை செய்து
சாகடிக்கிறாயே..

ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ..

உன்
உயிரை உறிஞ்சியவர்களுக்கு
இருமலை பரிசலிக்கிறாய்..

உன்
தீய்ந்த உடலை
காலால் மிதித்தவனுக்கு
‘கான்சரை ‘ தருகிறாய்..

உன்னை
முத்தமிட்டவன் உதடுகளை
காய்ந்த சகாராவாக்குகிறாய்..

பாஞ்சாலியாக்கி
பகிர்ந்து கொண்டவன் கதையை
சத்தமில்லாமல் முடித்து வைக்கிறாய்..

ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ.. !!!

-கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs