Thursday, February 5, 2009

தவளைகள்

மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு..

அதை
குறுக்கு வழியில்
மாற்றிட முயன்றால்..
இறுதியில் கிட்டும் ஆப்பு!

அரசியல் சகதியில்
தாவும் தவளைகள்..
கடைசியில் மூவரும்
வெறும் நீர்த்திவலைகள்..

தாவும் தலைவர்கள்
போயினர் சோரம்..
தரங்கெட்ட தலைவர்கள்
தரணிக்கு பாரம்...

கற்பை இழந்த
மூவரை மக்கள்
எளிதில் கண்டு கொள்வர்..

அடுத்த தேர்தலில்
இம்மூன்றும் சேர்ந்த
கூட்டணியை கண்டால் கொல்வர்..

மக்கள்..
கண்டாலே கொல்வர்!!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...!!!

-கிருஷ்ணமூர்த்தி

4 comments:

Sathis Kumar said...

//அடுத்த தேர்தலில்
இம்மூன்றும் சேர்ந்த
கூட்டணியை கண்டால் கொல்வர்..//

அடுத்த பொதுத்தேர்தலில் இக்கூற்று உண்மையாகப் போகிறது..

கிருஷ்ணா said...

ஆம் நண்பரே..

இன்று
கட்சித் தாவல்..

நாளை
ஊழலுக்கு காவல்..

இறுதியில்,
கண்ணீர்க் கூவல்!

நீதி என்றும் நிலைக்கும்..

ஆதவன் said...

மலேசிய அரசியல் மிகக் கேவலமான பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

கிருஷ்ணா said...

பள்ளத்தாக்கு அல்ல நண்பரே..
அதைவிடக் கொடிய
பாதாளம்!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs