Sunday, February 1, 2009

வெளியே வா...

வெளியே வா...
இங்கே,
இடியும் மழையும்
வெயிலும் புயலும்
இருட்டும் பகலும் இயற்கை..
வெளியே வா...

இங்கே,
வழி நெடுக முட்கள்..
உன் பாதங்களை
இட்றி விடும் கற்கள்..
இதயத்தை இரணமாக்கும்
எதிரிகளின் சொற்கள்..
இருந்தாலும் பரவாயில்லை..
வெளியே வா..!

சஞ்சிக்கூலிகளாய் வந்தோம்..
இன்னமும்
மாதக் கூலிகளாய்..

நீ கேட்கும் முன்னூரு
முழுசாய் கிடைக்கும் போது
உன்,
கண்ணீர் கூட வற்றிப் போயிருக்கும்..!
வெளியே வா..!

இங்கே..
பிழைக்க வந்த இந்தோனீசியனும்
இரண்டாயிரம் பெறுகிறான்..

பிறப்புரிமை கொண்ட உனக்கு மட்டும்
வேற்றும் முன்னூறு!!!

இருபது இருபது இலட்சியம்
உனக்கு மட்டும்
விதிவிலக்கா என்ன?
வெளியே வா..!!!

இனியும்,
தொலைத்து விட்ட வாழ்க்கையை
தோட்டத்திலேயே தேடிக்கொண்டிருக்காதே..!

பட்டணத்தில்
எலிகள் கூட பருத்து இருக்கின்றன..

புலியென நீ வந்தால்..
புவியே உனதாகும்!
தோல்விகளை
தோட்டத்திலேயே விட்டு விட்டு
வெற்றிக் கனிகளைபறிக்க
வெளியே வா..

ஒன்று மட்டும் உறுதி!

இன்று,
உனக்கு கிட்டாவிட்டாலும்
உன் பிள்ளைக்காவது கிட்டும் - வெற்றி..
நினைவில் கொள்!!!

-கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs