Sunday, February 1, 2009

உயிர்..!!!

ஞாபகங்களை துலக்கி
கடந்த காலத்தை கசக்கி
உயிரை உருக்கி
உனக்காய் எழுதினேன்..
காதல் மடல்..

என்
எதிர்பார்ப்புக்கள்
இறக்கும் வேலையில்
பதில் வந்தது..
ஒரே ஒரு வரியில்..

“என்னை மறந்துவிடு!”

மீண்டும்
இறுதியாக ஒருமுறை..
உயிரை உனக்காய் அனுப்புகின்றேன்..
இப்படிக்குஉடல்..!

-K.கிருஷ்ணமூர்த்தி
(காதல் தோல்வியினால் தற்கொலை செய்த ஒரு இளைஞனின் இறங்கல் செய்தியை படித்து விட்டு, எழுதிய கவிதை)

2 comments:

து. பவனேஸ்வரி said...

சோகமான கவிதை... நெஞ்சை வருடிச் செல்கிறது...

கிருஷ்ணா said...

வருடினால்.. சரி!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs